Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மணிநேரம் தாமதமாக கிளம்பிய விமானம் – காரணம் ஒரு எலியா ?

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (08:47 IST)
ஹைதராபாத்தில் எலியால் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் செல்ல தயாராக இருந்தது அந்த ஏர் இந்தியா விமானம்.  இந்நிலையில் அந்த விமானத்தில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்துவிட்ட ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அத்தனை பேரையும் ஏமாற்றி தப்பித்துள்ளது அந்த எலி. இதனால் காலை 6 மணிக்கே புறப்படவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டே மாலை வரை புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்..

பின்னர் ஒருவழியாக எலியை மாலை 5 மணிக்குப் பிடித்தனர் ஊழியர்கள். அதன் பின் அந்த விமானம் 11.30 மணிநேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. இந்த விஷயம் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments