Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் இருந்த வந்த அகிலேஷ் யாதவ் மகள்.. அம்மாவுக்காக தீவிர பிரச்சாரம்..!

Siva
வியாழன், 2 மே 2024 (07:23 IST)
லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் மகள் தனது தாய் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்து உடனே சொந்த ஊருக்கு வந்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் என்பவர் மெயின்புரி என்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் இந்த தொகுதியில் தற்போது தீவிரமாக பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மகள் அதிதி லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மா தேர்தலில் போட்டியிடுவதை அறிந்து உடனே லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது 
அதிகாலையில் அவர் பிரச்சாரத்துக்கு கிளம்பி விடுவார் என்றும் ஒவ்வொரு வீடாக சென்றும், சிறுசிறு கூட்டங்களில் பேசுவதோடு கட்சி நிர்வாகிகளின் துணையோடு தனது தாயாருக்கு வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் கூட செளம்யா அன்புமணிக்காக அவரது இரண்டு மகள்கள் பிரச்சாரம் செய்தது போல் அகிலேஷ் மகளும் அவரது அம்மாவுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments