Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித்ஷா உறுதி!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (19:30 IST)
என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு அடுத்ததாக தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வரும் பலர் குடிமக்கள் கணக்கெடுப்புக்கு எதிராகவும் போராட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இரு அமைச்சரவைகளிலும் விவாதிக்கவே இல்லை என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR – National Population Register) மட்டுமே எடுக்க உள்ளதாகவும், இதற்கும் குடிமக்கள் கணக்கெடுப்பு (NRC – National Register of Citizen)க்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து இதுவரை யோசிக்கக்கூட இல்லை என்று கூறியுள்ள அமித்ஷா, அசாமில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments