Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்பம் இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுங்கள்: ரஜினி நண்பரை வெளுத்து வாங்கிய துணை முதல்வர்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (11:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சத்ருஹன்சின்ஹா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனால் பாஜக எம்பியாக இருந்தாலும் அவ்வப்போது பாஜக ஆட்சியையும் பிரதமர் மோடியையும் இதர பாஜக தலைவர்களையும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான சுசில்குமார் மோடி, சத்ருகன் சின்காவின் தொடர் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'சத்ருஹன்சின்ஹா கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் எம்பி பதவியை அனுபவித்து கொண்டு கட்சியை விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். அவருக்கு பாஜகவில் தொடர விருப்பமில்லாவிட்டால் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்கா தற்போது எம்பியாக உள்ள பாட்னாசாகிப் தொகுதியில் இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் சுசில்குமார் மோடி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments