Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் மிதந்து வரும் பிணங்கள்: பீகார் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (08:10 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை முறைப்படி அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது 
 
பெரும்பாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பொதுமக்கள்தான் கொரோனா வைரஸால் இறந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசப் வருவதாகவும் அந்த பிணங்கள் கங்கையில் மிதந்து பீகார் மாநிலம் வரை வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து பீகார் அரசு அதிகாரிகள் அதிரடியாக பீகார் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் பல்வேறு இடங்களில் வலைகளை அமைத்து உள்ளனர். இந்த வலைகளில் சிக்கும் பிணங்களை கைப்பற்றி உடனடியாக அவர்கள் அடக்கம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசு அம்மாநில பொதுமக்கள் பிணங்களைத் தூக்கி எறியாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments