Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனோகர் பாரிக்கர் மகனுக்கு சீட் மறுப்பு – பாஜக முடிவு !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (15:21 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் கொடுக்க பாஜக தலைமை மறுத்துள்ளது.

மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் கணைய புற்று நோயால் மே 19 ஆம் தேதி மரணமடைந்தார்.  அதனையடுத்து சபாநாயகர் பிரோமத் சாவந்த் கோவவின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். பாரிக்கரின் மறைவிற்குப் பின அவரது பனாஜி தொகுதிக் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது பனாஜி தொகுதிக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அத்தொகுதிக்கு பாஜக வேட்பாளராக மனோகர் பாரிக்கரின் மகனான உஜ்பலுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு சித்தார்த் குன்கோலின்கருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

சித்தார்த் குன்கோலின்கர் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி முதலமைச்சராக பதவியேற்ற போது அவருக்காக பனாஜி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பதால் அவருக்கு இப்போது சீட் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments