Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை சென்ற தமிழக பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:57 IST)
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைள ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகரவிளக்கு பூஜையை காண அதிகளவில் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று ஐயப்ப பக்தர்கள் சிலர் பேருந்து மூலம் சபரிமலைக்கு சென்றிருந்தனர். இவர்களது பேருந்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் திருப்பூரை சேர்ந்த தர்மலிங்கம் என்று கூறப்படுகிறது
 
மேலும் பேருந்தில் சென்ற 17 ஐயப்ப பக்தர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் ஒரு பக்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கி, அதில் ஒரு பக்தர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments