Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (11:29 IST)
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள உலுபேரியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நோபரா சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அல்வார் தொகுதியில் மொத்தமாக ஆயிரத்தி 987 வாக்குச்சாவடிகளும் அஜ்மீர் தொகுதியில் மொத்தமாக 1,925 வாக்குச்சாவடிளும் இருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.
 
இன்று காலை 8 மணிக்கு முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை  நடைபெறும். நாட்டிலேயே முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 1- ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments