Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னம் மீது பாய்கிறது தேச துரோக வழக்கு…

Advertiesment
மணிரத்னம்

Arun Prasath

, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (14:23 IST)
பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பிரபலங்களின் மீதும் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது.
மணிரத்னம்

இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.
மணிரத்னம்

இந்நிலையில் மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்ரும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவால் தூண்டப்படுகிறது என கூறப்படும் மதவாதம், ஒற்றை கலாச்சாரத் திணிப்பு ஆகியவைகளை எதிர்த்து யாராவது கருத்து கூறினால் கூட தேச துரோகி என குற்றம் சாட்டப்பட்டு வரு நிலையில், தற்போது மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தை காப்பாற்றிய பணியாளர் – அதிபர் ட்ரம்ப் பாராட்டு !