Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. தயாராகும் 10,12-ம் வகுப்பு மாணவர்கள்..!

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:00 IST)
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்க இருப்பதை அடுத்து பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

சிபிஎஸ்இ  10, 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று தொடங்கும் பொது தேர்வு ஏப்ரல் இரண்டாம் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டும் குறிப்புகள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எனவே மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments