Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கு கருணை மதிப்பெண்

Advertiesment
சிபிஎஸ்இ
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:37 IST)
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
கடந்த மாதம் 5-ம் தேதி சிபிஎஸ்இக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. இதில் கடந்த மாதம் 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கான வினாத்தாளில் குறிப்பிட்ட ஒரு கேள்வியில் அச்சுப்பிழை இருந்தது.
சிபிஎஸ்இ
 
இது குறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ வாரியத்துக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து, சிபிஎஸ்இ வாரியம் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படிக்காமல் பதிவிட்டு விட்டேன் - மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்