Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! – மத்திய அரசு தளர்வுகள்!

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! – மத்திய அரசு தளர்வுகள்!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:51 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை முழுவதுமாக தொடங்கப்படாமல் உள்ளது. சிறப்பு விமானங்களில் மட்டுமே பயணிகள் பயணிக்கும் நிலையில் சமீபத்தில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு இதுவரை அமலில் இருந்த 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக! – வைகோ அறிவிப்பு!