Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்து கொள்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (12:39 IST)
ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தேவையற்ற சட்ட விரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. என்னிடம் நல்லபடியாக பழகுபவர்களுக்கு மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன்.

ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ போல செயல்படுகிறார். பல முதலமைச்சர்களை பார்த்துள்ளேன். ஆனால் ஜெகன் மோகன் போல மோசமான ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை” என கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்து வருவதால் இரு கட்சி தொண்டகளிடையேயும் பல்வேறு விரோத போக்குகள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments