Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் போட்ட நாடகம் ஆந்திராவில் ஓடாது: மோடிக்கு சந்திரபாபு நாயுடு கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (16:35 IST)
தெலங்கானா மாநிலம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவின் இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர்வையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த  2 அமைச்சர்கள் பதவி விலகினர். 
 
இது ஒருபுறம் இருக்க, அண்மையில் ஜனசேனா கட்சியின் ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கின்னார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆளும் பாஜக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை வைத்து தமிழத்தில் நடத்திய நாடகத்தை இங்கும் அரங்கேற்ற பார்க்கிறது என கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ வைத்து பாஜக ஆட்சி நடத்துவது போல ஆந்திராவில் நடத்த முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments