Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் பூ விற்று கொண்டிருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:16 IST)
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்று ஒருபக்கம் மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் வறுமையின் காரணமாக இன்னும் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வேலைக்கோ அல்லது வியாபரத்திலோ ஈடுபட செய்து கொண்டுதான் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற குமாரசாமி ராம்நகர் நோக்கி இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது கையில் பூக்கூடையுடன் ஒரு சிறுமி பூ வியாபாரம் செய்து வந்ததை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்த செய்து அந்த சிறுமியிடம் பேசிய முதல்வர் குமாரசாமி, அந்த குழந்தை பள்ளியில் சேர்ந்து படிக்க ஆவண செய்யும்படி தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அந்த சிறுமியிடம் பெற்றோரை அழைத்து கொண்டு தன்னை முதல்வர் அலுவலகத்தில் சந்திக்கும்படி கோரினார். முதல்வரின் இந்த கருணை உள்ளம் குறித்து சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments