Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (18:17 IST)
நாட்டின் தேசிய கட்சியான பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் மனு ஒன்றை அளித்துள்ளது. இது அரசியலில் சில சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.  
 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக வீணடிக்கப்பட்டது. 
 
அதோடு சேர்த்து காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். 
 
இதன் இடையே பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால், இந்த நோட்டீஸ் கண்டுக்கொள்ளப்படவில்லை. 
 
எனவே, காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. மேலும்,  மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 48 உறுப்பினா்களின் ஆதரவு இருக்கிறது. இருப்பினும் தீா்மானம் நிறைவேற 50 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் ஆதரவு கோர வாய்ப்புள்ளது. இதனால் பாஜக சிக்கலில் சிக்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments