Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனருடன் காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் பதவி யாருக்கு?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (18:22 IST)
கர்நாடக தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அவ்வப்போது திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. முதலில் காங்கிரசும் அதன் பின்னர் பாஜகவும் முன்னிலை பெற்றது. 
 
ஒரு கட்டத்தில் பாஜக 120 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா முதல்வர் பதவியை வரும் 17ஆம் தேதி ஏற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து 117 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சி தலைவர்கள் கூட்டாக கர்நாடக மாநில ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ஆட்சியமைக்க 111 பேர் தேவை என்ற நிலையில் தங்கள் அணியில் 117 பேர் உள்ளதாக ஆளுனரிடம் எடுத்து கூறியுள்ளனர். இதனால் இந்த அணியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று மாலை 6.15 மணிக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments