Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கும் போலீஸார் ! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:39 IST)
குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதில் முக்கியமாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசின் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதேபோன்று டெல்லி, மற்று சென்னை உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பிரபல பல்கலைக் கழகம், மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தபிரதேச மாநிலம்  லக்னோவில் உள்ள நட்வா கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியின் வாயிலை போலீஸார்  இழுத்து பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதேபோல் ,  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அலிகார் போலீஸார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.
 
இந்த வீடியோவை எடுத்த அலிகர் நிருபர் அட்னனை போலீஸார் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments