Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 2 வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை !!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (08:52 IST)
கொரோனா 2 வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா 2 வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை. குறிப்பாக மணிப்பூர், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பரவல் என்பது மீண்டும் அதிகரித்துள்ளது என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்தியாவில் 12 மாநிலங்களில் மொத்தம் இதுவரை 56 நபர்கள் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 2 வது அலை ஓய்ந்துவிட்டதாக கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments