Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து 40 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

தொடர்ந்து 40 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,21,17,826 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,30,254 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,13,02,345 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,85,227 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; இந்தியா காரணமா? – பாகிஸ்தான் பகீர் குற்றச்சாட்டு!