Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிடாமல் அணைகளை திறந்ததே கேரள வெள்ளத்திற்கு காரணமா?

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (16:07 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பாராத அளவு கொட்டித்தீர்த்தால், அங்கு அணைகள் நிரம்பி வேறு வழியின்றி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியது. 
 
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிய துவங்கியுள்ளதால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப காலமும், பொருளும் நிறைய தேவைப்படும். 
 
கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர். நடிகர்கள், அரசியல் தலைவர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது பங்கிற்கு நிவாரண நிதிகளை வழங்கினர். 
 
இந்நிலையில், கேரள வெள்ளத்திற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, மொத்த கேரளமும் மீட்பு பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசு தரப்பு செய்ய தவறியவையும் இருக்கிறது. 
 
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளை திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.
 
மழைப் பொழிவை கணக்கிட்டு, நிலைமையை ஆராய்ந்து, வேறு சாத்தியக்கூறுகளை ஆலோசித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments