Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராகும் ஆசையில்லை டெல்லி முதல்வர் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (15:45 IST)
டெல்லி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி யூனியன்  பிரதேசத்தின்   70 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத் தேர்தல் வரும் பிபரவரி 08 ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. 
 
டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், கிரேட்டர் கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நாட்டின் தலைநகர் டில்லியின் முன்னேற்றத்திற்காக தான் ஓட்டு வேண்டுமே அன்றி முதல்வர் ஆகும் ஆசை எனக்கில்லை என தெரிவித்தார்.
 
மேலும், டெல்லியில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்காக கடின உழைப்பை அளித்துள்ளோம்.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதி அனைத்தும் உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments