Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ட்ஸ் ரத்தம் ஏற்றிய ஊசியை செலுத்த ஊழியரை துரத்திய மருத்துவர்...

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:23 IST)
தனக்கு பணி ஒதுக்கப்படாததால் எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியை, உடலில் செலுத்த மருத்துவ கண்காணிப்பாளரை விரட்டிய மருத்துவர் கைது செய்யப்பட்டார்.


 

 
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் புரோட்டுடூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜு. அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் மருத்துவர் லட்சுமி பிரசாத். ராஜுக்கு பணி ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், கையில் ஒரு ஊசியுடன் மருத்துவர் லட்சுமியின் அறைக்கு சென்ற ராஜு, அந்த ஊசியை அவரின் உடலில் ஏற்ற முயன்றுள்ளார். அதை கவனித்துவிட்ட மருத்துவ ஊழியர்கள் அவரை தடுத்துள்ளனர். ஆனாலும், எப்படியாவது அந்த ஊசியை லட்சுமியின் உடலில் ஏற்றிவிட துடித்த ராஜூ அவரை விரட்டி சென்றுள்ளார்.
 
ஆனால், அங்கிருந்து மருத்துவ ஊழியர்கள் அவரை பிடித்து ஊசியிலிருந்த ரத்தத்தை வெளியேற்றினர். அதன்பின் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் இருந்த எடுத்த ரத்தத்தை ஊசியில் ஏற்றி, மருத்துவர் லட்சுமியின் உடலில் செலுத்த ராஜு முயன்றுள்ளார் என்பதும்,  தனக்கு பணி ஒதுக்காமல் மருத்துவர் லட்சுமி  ஓரங்கட்டியதால் கோபமடைந்த ராஜு அவரை பழிவாங்கவே இந்த செயலில் இறங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து மருத்துவர் ராஜூவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments