Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார்

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (16:24 IST)
சமீபத்தில் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா, அதன் பின் எழுந்த கடும் கண்டனங்களை தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுவதாக சாத்வி பிரக்யா பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாத்வி பிரக்யா, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, 'பாபர் மசூதியை இடித்ததற்காக ஏன் வருத்தப்பட வேண்டும். உண்மையில் அதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார். வீணான ஒன்று என்பதால் தான் பாபர் மசூதியை அப்புறப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
 
சாத்வி பிரக்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் இதுகுறித்து சாத்வி பிரக்யா தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்று அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments