Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (13:55 IST)
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது போக்ஸோ என்ற சட்டம் பாயும் என சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில் ஈரோடு அருகே ஏற்கனவே திருமணமான இளைஞர் ஒருவர் 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கடந்த 10 மாதங்களுக்கு முன் ஈரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த்ராஜ் என்பவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான ஒருசில மாதத்தில் மனைவியை பிரிந்துவிட்ட ஆனந்த்ராஜ், பின்னர் தனது வீடு அருகே உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி அவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார்.
 
இந்த நிலையில் மைனர் பெண்ணுடன் ஆந்திராவில் ஆனந்த்ராஜ் குடியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மைனர் பெண்ணையும் மீட்டனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த்ராஜூக்கு உதவிய முருகன் என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்