Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புகளை அகற்றி டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள்.. தலைநகரில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (17:13 IST)
டெல்லியை நோக்கி முன்னேறி வரும் விவசாயிகள் பேரணி மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பயிர்களுக்கு MSP-ஐ உறுதி செய்ய புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேரணி இன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் பேரணியை தடுக்க மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  டெல்லியில் நுழைகின்றன
 
விவசாயிகளை தடுக்க தரையில் ஆணிகளை பதித்து, சிமெண்ட்      தடுப்புகளை டெல்லி போலீஸ் வைத்துள்ள நிலையில் தடையை மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளை மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறி வரும் நிலையில்  கான்கிரீட் மட்டும் இரும்பு தடுப்புகளை ஒன்று சேர்ந்து அகற்றி டிராக்டர்களில் டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அம்பாலா எல்லையில் போலீசார் கண்ணீர் வெடிகுண்டு வீசியும் முக கவசம் அணிந்தபடி டிராக்டர்களில் விவசாயிகள் செல்வதாகவும் இதனால் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments