Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை கற்பழிக்கும் தந்தை ; வீடியோ எடுக்கும் மகள் : போலீசார் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (16:16 IST)
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த ஒரு நபரும், அவரின் மகளும் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அரியானா மாநிலத்தின் யமுனா நகரில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் சமீபத்தில் இவருக்கு தெரிந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று, தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது எனக்கூறி இனிப்பு வழங்கியுள்ளார். அதை சாப்பிட்ட அப்பெண் சிறுது நேரத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின் அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
 
இதில் என்ன கொடுமை எனில், இதை அவரின் மகள் வீடியோ எடுத்துள்ளார். அதன் பின் அப்பெண்ணிற்கு மயக்கம் தெளிந்தவுடன், அந்த வீடியோவைக் காட்டி அவரிடம் பணம் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். 
 
இதற்கிடையே இதுபோல் தங்களிடமும் அசோக்குமாரும் அவரின் மகளும் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக இரு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்குமார் மற்றும் அவரது மகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்