Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை இயக்க வந்த பெண் விமானி

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:51 IST)
மங்களூரில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க பெண் விமானி ஒருவர் குடிபோதையில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
கர்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு துபாய்க்கு 180 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை இயக்க துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் விமானி ஒருவர் வந்துள்ளார்.
 
அவர் தள்ளாடியபடி வந்ததால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அவரை மருத்துவ சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேர மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து அந்த விமானம் மாற்று விமானி மூலம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அந்த பெண் விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments