Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னியாசி பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (17:10 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 சன்னியாசி பெண்களை 4 பேர் மிரட்டி கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சத்தீஸ்கர் - சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு இரண்டு சன்னியாசி பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களை ஒரு ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் வந்துள்ளார்.
 
ஆனால், ஆசிரமத்திற்கு செல்லாமல் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஏமாற்றி காரை கோர்பா மாவட்டம் செல்லும் வழியில் ஓட்டி சென்று ஓரிடத்தில் காரை நிறுத்தி படேல் உள்பட அவரின் 3 நண்பர்கள் என மொத்தம் 4 பேரும் சன்னியாசிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்துள்ளனர். அதன்பின் இதை வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு, சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சன்னியாசிகளில் ஒருவர் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு இதுபற்றி புகார் அனுப்பினார். எனவே, அந்த 4 பேரின் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்