Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை கொடுத்த சாமியாருக்கு உருட்டுக்கட்டை அடிகொடுத்த பெண்கள்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (00:20 IST)
இந்தியா முழுவதும் போலிச்சாமியார்களின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக போலிச்சாமியார்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற பகுதியில் உள்ள ஒரு சாமியார் கடந்த சில நாட்களாக பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் அந்த சாமியாரை பெண்கள் இருவர் நீண்ட உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அடித்து வெளுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது அந்தச் சாமியார் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இரண்டு பெண்கள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்பட்டது

இரண்டு பெண்களின் உருட்டுக்கட்டை அடியால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த சாமியாரை போலீசார் வந்து மீட்டு சென்றனர். தற்போது சாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

அடுத்த கட்டுரையில்