Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (07:42 IST)
அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சே குறித்து கமல் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் ஒருசிலர், கோட்சேவை தியாகி என்றும் போற்றி பின்னர் கண்டனங்களை பெற்று வந்தனர். குறிப்பாக பாஜக பெண் சாமியார் பிரக்யாசிங், கோட்சே குறித்து கூறிய ஒரு கருத்து மன்னிக்க முடியாத தவறு என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இருப்பினும் கோட்சேவை இன்னும் ஒருசிலர் போற்றி புகழ்ந்து வருகின்றனர்
 
இந்த நிலையில் குஜராத் மாநில கோயில் ஒன்றில் கோட்சேவின் பிறந்ததினத்தை கொண்டாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து மகாசபா என்ற அமைப்பின் சார்பில் குஜராத் மாநிலத்தின் லிம்பயாத் என்ற இடத்தில் உள்ள சூரியமுகி ஹனுமான் கோயிலில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது. நாதுராம் கோட்சே பிறந்த நாளான கடந்த ஞாயிறு அன்று இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒருசிலர் கோட்சேவின் படத்தை வைத்து பூஜை செய்து கொண்டாடியதாக தெரிகிறது.
 
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து சுதாரித்த குஜராத் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments