Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மன்னர் போல் செயல்படுகிறார்.! ராகுல் காந்தி விமர்சனம்.!!

Rahul Gandhi

Senthil Velan

, புதன், 4 செப்டம்பர் 2024 (16:17 IST)
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார்  என காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  
 
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு  மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அதன்படி ராம்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர்,   மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது என்றார்.
 
மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது என்றும்  ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி உறுதி செய்யும் என்றும் ராகுல் உறுதியளித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ., வெறுப்பு, வன்முறை மற்றும் பயத்தை பரப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை நடத்தினோம் என்று கூறினார்.  

 
இங்கு மாநில அந்தஸ்து மட்டும் பறிக்கப்படவில்லை, மக்களின் உரிமைகள், வளங்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் இன்று மன்னர் ஆட்சி உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுகிறார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைக்கு விண்ணப்பித்த இளைஞரின் பெயரில் ரூ.250 கோடி மோசடி.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!