Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறுப்பு பிரசாரம்: கூகுள் மற்றும் ஃபேஸ்புக் CEO -களுக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:21 IST)
அடுத்தாண்டு நமது நாட்டில்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி ஒரு சில கட்சிகளுடன் இணைந்து  மூன்றாவது அணி அமைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கிய  இந்தியா என்ற கூட்டணி  கூகுள் மற்றும் ஃபேஸ்புக் சிஇஓக்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்தியாவில் ஃபேஸ்புக், யூடியூப் வாட்ஸ் ஆப் ஆகியவரை நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்யும்படி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மெட்டா தலைவர்  மார்க் ஜூகர்பெர்க் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வாஸிங்டன் போஸ்ட் நாளிதழ் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் குறித்த ஆயுவுக்கட்டுரையைச் சுட்டிக்கட்டி   நடுநிலையுடன் செயல்படுவதை உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments