Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குறித்து ஹிண்டன்பர்க் கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:24 IST)
அதானி நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க்  என்ற அமைப்பு கூறிய கருத்துக்களுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து அந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்தது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களாக விசாரித்தது.

மேலும் செபியின் விதிமுறைகள், பங்குச்சந்தை கட்டமைப்பை வழிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments