Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க சொல்லி வற்புறுத்திய கணவர் கைது!

arrested
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:15 IST)
பொது வெளியில் உள்ள நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்கச் சொன்ன கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புனே நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனே நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் அவர் சாமியாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
 அந்த சாமியார் தொழில் அதிபரின் மனைவியை நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியதாக தெரிகிறது 
 
இதனையடுத்து அந்த தொழிலதிபர் தனது மனைவியை நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊதியம் கேட்டு மறியல் செய்த இந்திய தொழிலாளர்களை நாடு கடத்திய கத்தார்