Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் மூலம் தலாக் சொன்ன கணவர்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேறிய பிறகும் நடக்கும் கொடுமை

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:28 IST)
உத்தர பிரதேசத்தைச் சேந்த ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவிக்கு மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

முத்தலாக் தடை மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தியாவின் பல மாநிலங்களில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

குவைத் நாட்டில் வேலை செய்து வரும் இவர் மீது, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, வரதட்சனை கேட்டு துன்புறுத்தவதாக அவரது மனைவி உத்தர பிரதேசத்தின் சிகேதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின்பு அந்த புகாரை வாபஸ் பெறுமாறு தன் மனைவியை மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மனைவி அந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நேற்று வாட்ஸ் ஆப் மூலம், அவர் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது பற்றி சிகேதா காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments