Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா வந்தது உருமாறிய கொரோனா; 6 பேருக்கு பாதிப்பு உறுதி!

இந்தியா வந்தது உருமாறிய கொரோனா; 6 பேருக்கு பாதிப்பு உறுதி!
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:51 IST)
பிரிட்டனில் பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 113 பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொன்னப்படி கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி??