Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகள்; 5வது இடத்தில் இந்தியா! – ஐ.நா தகவல்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (10:35 IST)
கொரோனாவால் பொருளாதார மந்தநிலை நிலவிய நிலையிலும் உலக அளவில் அதிகமான அந்நிய முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் உலக பொருளாதாரத்தையே முடக்கியுள்ளன. இந்நிலையில் உலக நாடுகள் பல அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கியுள்ளது. 2019ல் 1.5 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த உலகளவிலான அந்நிய முதலீடு கடந்த ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலராக சுருங்கியது.

இப்படியான மந்த நிலையிலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டில் 51 பில்லியனாக இருந்த அந்நிய முதலீடு 2020ல் 64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பல நாடுகள் பொதுமுடக்கம் காரணமாக தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் ஐ.டி மீதான முதலீடு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டில் அதிக முதலீடுகளை ஈர்த்த நாடுகளில் இந்தியா 5வது இடத்தை அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments