Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையில் பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை: பெரும் பதட்டம்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:45 IST)
இந்திய எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பகுதியிலுள்ள எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயலும்போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
 
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கியுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
 
இதனை அடுத்து எல்லையை தாண்ட வேண்டாம் என பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை செய்தனர். ஆனால் எச்சரிக்கையை மீறி அவர் இந்திய எல்லையை நோக்கி தொடர்ந்து முன்னேறிய நிலையில் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக சுட்டனர் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்
 
இதனையடுத்து எல்லைப் பகுதியில் தீவிர சோதனையை எல்லைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments