Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

Advertiesment
இந்தியா

Siva

, ஞாயிறு, 18 மே 2025 (08:36 IST)
ஒரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்து வருவதால் இந்தியா அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வங்கதேசம் சட்ட விரோதமாக தன்னுடைய நாட்டினரை இந்தியாவுக்கு அனுப்பி வருவதால் அந்நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்காத திட்டமிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குறிப்பாக, வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடை பொருள்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வங்கதேசத்திலிருந்து ஏராளமான ரெடிமேட் ஆடை பொருட்கள் கொல்கத்தா மற்றும் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்குகின்றன. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை பொருட்கள் வருடத்திற்கு 700 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்றும்  தற்போதைய நிலையில், இந்திய அரசு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சில நிபந்தனைகள் விதித்திருப்பதால் இந்த வருமானம் நின்று போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதேபோல், வட இந்திய பகுதிகளிலும் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், குறிப்பாக அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கு வங்கதேசம் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வரும் நிலையில், அவை இனிமேல் தடைபடலாம் என்றும் கூறப்படுகிறது.  
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!