Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸுக்காக சபதத்தை உடைத்த கபில் சிபல்....

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (14:06 IST)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை நீதிமன்றத்திற்கு வர மாட்டேன் எனக் கூறிய வழக்கறிஞர் கபில் சிபில் இன்று கர்நாடக பிரச்சனைக்காக நீதிமன்றம் வந்து வாதிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் இருப்பதால், குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று வழக்கு நடைபெற்ற போது மூத்த வழக்கறிஞர் கபல் சிபில் காங்கிரஸ்-மஜக கட்சிக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் வாதிட்டார். 
 
கபில் சிபில் இந்த வழக்கில் ஆஜராகியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என அவர் அறிவித்திருந்தார். ஆனால், கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால், அவர் தனது சபதத்தை உடைத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கி வாதிட்டார். நாளை வாக்கெடுப்பு நடைபெற இவரின் வாதம் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments