Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக முதல்வரை மிரட்டிய மடாதிபதி ! அரசியலில் பரபரப்பு !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (14:55 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி ஒருவர் மிரட்டிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். 
 
விழாவின் மேடையில் பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமூதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்காமல் இருந்தால், உங்களை எங்கள் சமுதாயம் புறக்கணிந்துவிடும் என மிரட்டல் விடுக்கு தொனியில் பேசினார்.
 
அதைக்கேட்ட முதல்வர் எடியூரப்பா தனது இருக்கையை விட்டு எழுந்து, இதுபோல்  பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதி வச்சதானந்தாவிடம் தெரிவித்தார்.
 
மேலும், தன்னை முதலமைச்சர் பதவியில் அமரவைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள் எனவும் அவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments