Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைத்தேர்தலில் முதல்வரின் முதல் மனைவி போட்டியா?

Advertiesment
இடைத்தேர்தல்
, திங்கள், 8 அக்டோபர் 2018 (08:58 IST)
சமீபத்தில் ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுடன் கர்நாடக மாநிலத்தில் காலியாகவுள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியான ராமநகரா என்ற தொகுதியில் தான் போட்டியிட போவதாக முதல்வர் குமாரசாமியின் முதல் மனைவியும் முன்னாள் நடிகையுமான அனிதா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா, தன்னை ராமநகரா தொகுதியின் வேட்பாளராக நிறுத்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இடைத்தேர்தல்
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைமையோ, முதல்வர் குமாரசாமியோ இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் அனிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 சப்ஜெக்டில் ஃபெயில்: லூசு போல் திரிந்த என்ஜினியரிங் மாணவி