Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! – கேரளாவில் அதிர்ச்சி!

Advertiesment
Kerala
, புதன், 1 ஜூன் 2022 (11:07 IST)
கேரளாவில் தேயிலை தோட்டத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக மேற்குவங்கத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 வயது சிறுமியுடன் வந்துள்ளனர்.

அங்குள்ள தேயிலை தோட்டத்தை சுற்றி பார்ப்பதற்காக சிறுமி தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் 4 பேர் சிறுமியின் நண்பரை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பன் சத்தம் போடவே அருகில் இருந்த தொழிலாளர்கள் வந்ததால் குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 4தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பா & மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிய நிபந்தனைகள் !!