Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேதர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (21:41 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் கும்பமேளா நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது 
 
இந்த நிலையில் கும்பமேளாவை அடுத்து தற்போது கேதார் யாத்திரை தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத் பத்ரிநாத் கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு ஆன்மீக யாத்திரை தொடங்கும் என்பது தெரிந்ததே. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கேதார் யாத்திரை மே மாதம் 14ஆம் தேதி தொடங்கும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த யாத்திரையை நடத்த வேண்டுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் யாத்திரை தொடங்கும் தேதியை உத்தரகாண்ட் அரசு உறுதியாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments