Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த சடங்கும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டார் கிரிஷ் கர்னாட்:காரணம் என்ன??

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (16:19 IST)
கிரிஷ் கர்னாட் அவர்களின் உடலை எந்த சடங்கும் சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்யப்பட்ட செய்தி பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.



எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். தமிழில் காதலன்,ரட்சகன்,ஹே ராம்,போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைத்துறையில் இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரிஷ் கர்னாட் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். தற்போது அவரது உடலை எந்த சடங்கும் சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்துள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது.

கிரிஷ் கர்னாட்டின் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி ஊர்வலத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இது குறித்து கிரிஷ் கர்னாட்டின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, தன்னுடைய உடலை எந்த சாஸ்திர சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்யவேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை என்று பதிலளித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

மேலும் கிரிஷ் கர்னாட்டின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வண்ணமாக அவருக்கு செய்யவிருந்த அரசு மரியாதையையும் கர்னாடக அரசு கைவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments