Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. 2 மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (09:17 IST)
வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வங்க கடலில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி தாழ்வு மண்டலமாக மாறி புயலாகவும் மாறி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்கண்ட் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்பதை உறுதி செய்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு என அறிவித்துள்ளது

இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .  மேலும் கேரள மாநிலத்திலும் இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 12 சென்டிமீட்டர் வரையிலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் கேரள மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments