Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரியில் மோதி தீ பிடித்த பேருந்து.. உடல் கருகி இறந்த பயணிகள்! – நாசிக்கில் கோர விபத்து!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (09:52 IST)
மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகள் பேருந்து லாரியில் மோதி தீ பிடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று அதிகாலை 5 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

ALSO READ: இனி திப்பு எக்ஸ்பிரஸ் இல்ல.. உடையார் எக்ஸ்பிரஸ்..! – ரயில் பெயர் மாற்றத்தால் சர்ச்சை!

இந்த விபத்தில் பேருந்து மோதிய வேகத்தில் தீ பற்றியுள்ளது. தீ வேகமாக பேருந்துக்குள்ளும் பரவி பற்றி எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்துக்குள் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 11 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 32 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழே வருமா?

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments