Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 6 June 2025
webdunia

ஒரே மாதத்தில் 4 தற்கொலைகள்: மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்கு போடப்பட்ட வலை

Advertiesment
Maharashtra
, செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (03:33 IST)
காராஷ்டிராவில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தின் உயரத்தில் இருந்து குதித்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் தற்கொலை செய்துள்ளதால் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு வலை மாட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைமை செயலக கட்டிடத்தின் நடுவில் நீண்ட இடைவெளி இருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு தற்கொலை இந்த கட்டிடத்தில் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தற்போது இரும்பு கம்பியிலான வலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் உயரத்தில் இருந்து குதித்தாலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூவை நாக்கால் சுத்தம் செய்த வாலிபர் அவமானத்தில் தற்கொலை