Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெத்த தாயா இருந்தாலும் கடமைன்னு வந்துட்டா..! – கடையை காலி செய்த நகராட்சி ஊழியர்

Webdunia
புதன், 12 மே 2021 (08:24 IST)
மகாராஷ்டிராவில் பொதுமுடக்க விதிகளை மீறி காய்கறி கடை நடத்திய தாயின் கடையை நகராட்சி ஊழியரான மகனே காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக். நகராட்சி ஊழியரான இவர் சமீப காலமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

அவ்வாறாக கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவதை சோதனை செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது அவரது தாய் வீட்டின் அருகே ஒதுக்குபுறமாக காய்கறி கடையை வைத்து நடத்தி வந்துள்ளார். இதை கண்ட ரஷீத் கொரோனா விதிமுறைகளின்படி ஓரிடத்தில் கடை போன்று அமைத்து காய்கறிகளை விற்பது தடை செய்யப்பட்டது என்பதால் தாயார் என்றும் பாராமல் அவரது காய்கறி கடையை காலி செய்ததுடன், காய்கறிகளை அள்ளி நகராட்சி வண்டில் கொட்டினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் ரஷீத் ஷேக்கிற்கு பலரும் கடமையை கட்டுக்கோப்பாக செய்ததை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments